மஞ்சூர், செப். 25: கேத்தி பேரூராட்சி பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கேத்தி பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில் சில பணிகள் முடிந்த நிலையில், மற்ற திட்டப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிகாரிகளுடன் திடக்கழிவு மேலாண்மை திட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டு தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், தாசில்தார் தினேஷ்குமார், திட்ட இயக்குனர் பாபு, கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.