×

நாகர்கோவில் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் நோபிள் கல்லூரி மாணவியர் பங்கேற்பு

விருதுநகர், செப். 25: விருதுநகர் நோபிள் பெண்கள் கல்லூரியில் மாணவியரின் ஆளுமை திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆளுமை மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் ரோட்டரி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த மாவட்ட அளவிலான இளையோர் சேவை கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் நோபிள் கல்லூரி ரோட்டராக்ட் மாணவிகள் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி, கல்வியின் முக்கியத்துவம், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைத்தார். கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : Noble College ,Nagercoil College ,
× RELATED விருதுநகரில் தேர்தல் விழிப்புணர்வு