×

திருக்களம்பூரில் போலீஸ்-பொதுமக்கள் மது ஒழிப்பு கூட்டம்

பொன்னமராவதி, செப்.25: பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் போலீஸ்-பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் மது ஒழிப்புக்கூட்டம் நடந்தது. பொன்னமராவதி உட்கோட்டம், பொன்னமராவதி காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுடன் போலீஸ் இணைந்து செயல்பட வேண்டும், எந்த பிரச்னையாக இருந்தாலும் அச்சமின்றி காவல் நிலையத்தை நாடவேண்டும், எப்போதும் பொதுமக்களுக்கு போலீஸ் நண்பனாகவே இருக்கும், மேலும் மது மருந்துதல் தவிர்க்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேசினார். இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Police-Public Liquor Abolition Meeting ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ