×

கட்டையாண்டிபட்டியில் 35 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி

பொன்னமராவதி செப்.24: பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியில் கபடி போட்டி நடந்தது.ஊர்முக்கியஸ்தர் கருத்தான் விழாவிற்கு தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். ஊர் முக்கியஸ்தர் தவுடன் முன்னிலை வகித்தார்.கபாடிப் போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட கபாடி அணியினர் கலந்து கொண்டனர். இதில் முதல்பரிசை குன்றக்குடி அணியினரும், 2வது பரிசை கட்டையாண்டிபட்டி அணியினரும், 3வது பரிசை காரைக்குடி அணியனரும், 4வது பரிசை பூலாங்குறிச்சி அணியினரும் வெற்றி பெற்றனர். மேலும் 5முதல் 8வரை வெற்றி பெற்ற அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளும், வெற்றிக் கோப்பைகளையும் வழங்கினர். ஏற்பாடுகளை கட்டையாண்டிபட்டி அழகியநாச்சியம்மன் கபாடி குழு மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : teams ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல்...