புதுக்கோட்டை, செப்.24: புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அபின் டேனியல். இவர் புத்தாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அபின் டேனியலை கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.