×

தூத்துக்குடியில் துணிகரம் தனியார் பள்ளி நிறுவனர் வீட்டில் 10 பவுன் கொள்ளை

தூத்துக்குடி, செப். 24: தூத்துக்குடியில்  தனியார் பள்ளி நிறுவனர் வீட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை போனது. தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன். தூத்துக்குடியில் தனியார் பள்ளி  நடத்தி வருகிறார். இவரது மகள்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். நேற்று காலை இவர்களது வீட்டுக்கு வந்த உறவினர், முன்பக்க கதவு உடைந்தது கண்டு பதறினார். தகவலை அடுத்து விரைந்துவந்த சாம்சன் மற்றும் சிப்காட் போலீசார் விரைந்துவந்தனர். இதில் பீரோக்களை உடைத்த மர்மநபர்கள் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும். வழக்குப் பதிந்த போலீசார், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : robbery ,house ,Thoothukudi ,private school founder ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்