காளையார்கோவில், செப்.19: விபத்தில் தந்தையை இழந்த 2 மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விபத்து காப்பீட்டு உதவித்தொகை வழங்கப்பட்டது.
காளையார் கோவிலை சேர்ந்தவர் முருகபாலன் (45). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது மகள்கள் ஜமுனா (10) ஐந்தாம் வகுப்பில், ராசாத்தி (9) நான்காம் வகுப்பிலும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் விபத்து காப்பீட்டில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 75 ஆயிரத்திற்கான காசோலையை தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி வழங்கினார். அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் தாமஸ்அமலநாதன் உடனிருந்தார்.