காரைக்குடி, செப்.19: காரைக்குடி, கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். மலேசியாவில் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் அருண் என்ற சண்முகராஜ், பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 19 நாட்களாக கல்லூரி செல்லாத நிலையில், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.