பாலக்காடு, செப். 17: பாலக்காடு சங்குவார்த்தோடு சமத்துவகாலனியை கேரள பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பாலன் நேற்று திறந்து வைத்தார். பாலக்காடு அடுத்த சங்குவார்தோடு சமத்துவ காலனியை கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பாலன் நேற்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். ரூ.7.20 கோடி செலவீட்டில் அமைக்கப்பட்டுள்ள 64 தொகுப்பு வீடுகளில் 40 பேருக்கு வீடுகளை அமைச்சர் வழங்கினார். மீதமுள்ள 24 வீடுகள் விண்ணப்பத்தாரர்களின் வரிசைப்படி வழங்கப்படவுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தொகுப்பு வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சங்குவார்தோடு சமத்துவகாலனி திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ., ஷாபிபரம்பில் தலைமை தாங்கினார். இதில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.