×

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப். 17: மத்திய தொழிலாளர் நல சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை கைவிடக்கோரி திருவாரூரில் நேற்று சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொழிலாளர் நல சட்டங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்வதை கண்டித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசு கொள்முதல் நிலையங்கள், ரயில்வே குட் செட்டுகள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு மத்திய சேமிப்புக் கிடங்கு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று இணையான ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கூலி வழங்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக சிஐடியு தொழிற்சங்கம் சார்புடைய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி யு மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Heavy Workers Union ,
× RELATED சுமைதூக்கும் தொழிலாளர் சங்க கூட்டம்