×

பர்கூர் மலைப்பாதை சாலையில் தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை

அந்தியூர், செப்.10:  பர்கூர் மலைப்பகுதிக்கு அந்தியூரில் இருந்து வரட்டுப்பள்ளம் வழியாக 23 கி.மீ கொண்ட மலைப்பாதை சாலையில் தினமும் 100க்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இச்சாலையின் ஓரத்தில் ஒரு சில இடத்தில் மட்டும் தடுப்பு கம்பிகள் இரண்டு அடி உயரத்தில் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதிக வளைவு கொண்ட பகுதிகளில் தடுப்பு கம்பிகள் கிடையாது. அப்போது சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் வரும் போது அந்த பகுதியை கடப்பதற்காக மலைப்பாதையின் ஓரம் வரை சென்று மற்ற வாகனத்திற்கு வழிவிட வேண்டிய நிலையுள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘மலைப்பாதை சாலை குறுகலாக உள்ளதால் வாகனங்களில் விரைந்து செல்ல முடியவில்லை மேலும், பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு கம்பிகள் முற்றிலும் கிடையாது. விபத்து நடக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இந்த மலைப்பாதையில் சாலையின் ஓரத்தில் அனைத்து பகுதியிலும் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags :
× RELATED வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது