×

கோயிலில் திருமணம் முடிந்ததும் மாட்டுவண்டியில் சென்ற புதுமண தம்பதி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளைத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி இவரது மனைவி ராஜாமணி. இவர்களின் மகன் பிரகாஷ். இவருக்கும்  பனப்பட்டியை சேர்ந்த செல்லக்குமாரசாமி- பத்மா தம்பதியின் மகள் சரண்யாவுக்கும் நேற்று கிணத்துக்கடவில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமக்களை காரில் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் அழிந்து வரும் கிராமிய கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் புதுமண தம்பதி திருமணம் நடந்த இடத்திலிருந்து மணமகன் வீடு வரை மாட்டு வண்டியிலேயே பயணம் செய்தனர். நவீன உலகில் பாரம்பரிய,  கலாசாரங்களை மறந்து புதிய புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில்,  கிராமிய கலாசாரங்களை மறக்காமல், பாதுகாக்கும் வகையில் இது போன்று மாட்டுவண்டியில் சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். புதுமணத்தம்பதி கிராமப்பகுதிகளில் மாட்டுவண்டியில் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்….

The post கோயிலில் திருமணம் முடிந்ததும் மாட்டுவண்டியில் சென்ற புதுமண தம்பதி appeared first on Dinakaran.

Tags : Kinathukadavu ,Rangasamy ,Kodankipalai ,Rajamani ,Prakash ,
× RELATED கோவை மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது