சென்னை: சென்னையில் உள்ள புகழ்பெற்ற மல்டி சென்டர் டயக்னோஸ்டிக் செயினான ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ் சமீபத்தில் இமேஜிங் நடைமுறையில் ஏஐ உள்ளிட்ட நவீன இமேஜிங் தொழில்நுட்பங்களை பெறுவதன் மூலம் அதன் டயக்னோஸ்டிக் திறன்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த இமேஜிங் மையங்கள் 10 மாநிலங்களில் செயல்படுகின்றன. அனைத்து ஆய்வகங்களிலும் எம்ஆர்ஐ, சிடி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, மேமோகிராம், ஓபிஜி மற்றும் ஆய்வக வசதிகளுடன் ‘ஒன் இந்தியா ஒன் பிரைஸ்’ என்பதற்க்கு இணங்க அனைத்து நோயறிதல் சேவைகளுக்கும் பொருத்தப்பட்டுள்ளது.ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ் தனது தொடர்ச்சியான நம்பிக்கையை மருத்துவ தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் மைண்ட்ரே இந்தியா உடன் நிரூபித்துள்ளது. இந்த மையம் அதன் டயக்னோஸ்டிக் செயினுக்கான நீண்ட கால அல்ட்ராசவுண்ட் கருவி ஒப்பந்தத்திற்காக செப்டம்பர் 2021ல் மைண்ட்ரே இந்தியாவுடன் ஒரு பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். இதுகுறித்து ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸின் நிறுவனர் கோவிந்தராஜன் கூறுகையில், `நியாயமான விலையில் உயர்தர மற்றும் நம்பகமான இமேஜிங் தயாரிப்புகளை வழங்கிய மைண்ட்ரே இந்தியாவின் ஆதரவின்றி மலிவான ஸ்கேனிங் காரணத்தை மையத்தால் ஊக்குவிக்க முடியாது,’ என கூறினார். …
The post ஆர்த்தி ஸ்கேன்ஸ், மைண்ட்ரே இந்தியா சார்பில் அல்ட்ராசவுண்ட் ஒப்பந்தம் appeared first on Dinakaran.