×

தாழ்வாரத்தில் குட்டி ஈன்ற தெரு நாய் 7 நாய் குட்டிகளை கொல்ல தீ வைத்த கொடூர பெண்கள்: 5 ஆண்டு சிறையில் தள்ள வழக்குப் பதிவு

திருவனந்தபுரம்:கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் லட்சுமி. இரு தினங்களுக்கு முன் தெரு நாய் ஒன்று மேரியின் வீட்டின் தாழ்வார பகுதில் 7 குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த நாயை மேரி விரட்ட முயன்றுள்ளார். நாய் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் ஆத்திமடைந்த மேரி, பக்கத்து வீட்டை சேர்ந்த லட்சுமியுடன் சேர்ந்து தாய் நாயையும், 7 குட்டிகளையும் கொல்வதற்காக தீ வைத்துள்ளார். தகவலறிந்து வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் தாழ்வாரத்தின் உட்பகுதியில் 5 குட்டிகள் பதுங்கி இருந்தன. இதை பார்த்த மகிழ்ந்த அவர்கள், அவற்றை மீட்டனர். மற்ற 2 குட்டிகளை காணவில்லை. தாய் நாய்க்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு, முவாட்டுபுழாவில் உள்ள தயா விலங்குகள் நல மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து மேரி, லட்சுமி இருவர் மீதும் ஜாமீனில் வரமுடியாத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நாய் குட்டிகள் கொல்லப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்….

The post தாழ்வாரத்தில் குட்டி ஈன்ற தெரு நாய் 7 நாய் குட்டிகளை கொல்ல தீ வைத்த கொடூர பெண்கள்: 5 ஆண்டு சிறையில் தள்ள வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mary ,Alangadu ,Kochi, Kerala ,Lakshmi ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!