×

மாற்றுதிறனாளிக்கான உதவித்தொகை வழங்க ரூ.2ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலப்பெரும்பள்ளம் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(61). விவசாயி. இவரது மனைவி தையல்நாயகி (55), மாற்றுதிறனாளி. இதற்கான உதவித்தொகை கேட்டு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்தாண்டு மனு கொடுத்திருந்தார். ஆனால், உதவித்தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 3ம்தேதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம், மாற்றுதிறனாளிக்கான உதவித்தொகை கேட்டு தையல்நாயகி மனு அளித்துள்ளார். கலெக்டர் உத்தரவின் பேரில், தரங்கம்பாடி தனி தாசில்தார் பாலமுருகனிடம் நேற்று முன்தினம் தையல்நாயகி கேட்டதற்கு உங்களுடைய விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொண்டு வர வேண்டும். அதை நானே செய்து விடுகிறேன். அதற்கு ரூ.2ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது குறித்து நாகப்பட்டினத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சித்திரவேலிடம் தையல்நாயகியின் கணவர் ராமச்சந்திரன் நேற்று புகார் அளித்தார். பின்னர் அவரது ஆலோசனையின்பேரில் நேற்று மதியம் 1.30 மணியளவில் தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த ராமச்சந்திரன், அங்கிருந்த தனி தாசில்தார் பாலமுருகனிடம் ரூ.2ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். …

The post மாற்றுதிறனாளிக்கான உதவித்தொகை வழங்க ரூ.2ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Mayiladuthurai ,Ramachandran ,Melaperumpallam Karaimedu ,Boombukar ,Thayyalanaiki ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...