×

குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு விஷமருந்திய மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

கந்தர்வகோட்டை, ஜூன்25: கந்தா–்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் வயிற்று வலி காரணமாக விஷமருந்திய மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.. கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி செங்கமலம்(67). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கடந்த 21ம் தேதி மாலை அவர்களது தோட்டத்தில் குருணை மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உடனடியாக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கந்தா–்வகோட்டை இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...