×

மழை வேண்டி மகா யாகம்

செம்பட்டி, ஜூன் 25: செம்பட்டி அடுத்த பாளையங்கோட்டை சக்தி நகரில் உள்ளது சர்வ சக்தி அம்மன் கோயில். இங்கு தினமும் யாக வேள்வியும், ஆராதனை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. நேற்று மழை பெய்ய வேண்டி பகவான் சர்வசக்தி சுவாமிகள் சிறப்பு மகா யாக பூஜை செய்தார். காலை 7 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை இப்பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்