×

வாகன விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்

செங்கல்பட்டு. ஜூன் 25: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (21). இவரது நண்பர் கும்பகோணத்தை சேர்ந்த பாலாஜி (23). இருவரும், சிங்கப்பெருமாள் கோயிலில் தங்கி,  மகேந்திரா சிட்டியில் ஒரு தனியார் கம்பெனியில் குவாலிடிட்டி மேலாளராக வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். மகேந்திராசிட்டி அருகே சாலையில் சென்றபோது, திடீரென தறிக்கெட்டு ஓடிய பைக், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்தார். பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : vehicle accident ,
× RELATED தூய்மை பணியாளர் விபத்து இழப்பீடு...