×

அடுத்தடுத்து 3 கோயில்களில் உண்டியல்களை உடைத்து கொள்ளை

உத்திரமேரூர், ஜூன் 19: உத்திரமேரூர் அடுத்த சிறுமயிலூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. மிக பழமையான இந்த கோயிலில் இதே கிராமத்தை சேர்ந்த குப்பன் (60) என்பவர் பூசாரியாக உள்ளார். தினமும் காலை மற்றும்  மாலை வேளைகளில் அம்மனுக்கு பூஜை செய்து பராமரித்து வருகிறார். கிராம மக்கள், அம்மனை தினமும் வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி குப்பன், பூஜைகள் முடிந்து கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கோயிலை திறக்க சென்றார். அப்போது கோயில் கதவு திறந்து கிடப்பதை கண்டு  அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது, அதே கிராமத்தில் உள்ள சித்திவிநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில்களில் உள்ள உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது  தெரியவந்தது.
புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் ₹50 ஆயிரம் வரை கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது.


Tags : piggy bank ,
× RELATED நாமக்கல் அருகே கோயில் உண்டியலில் ரூ50 ஆயிரம் திருட்டு