×

நாமக்கல் அருகே கோயில் உண்டியலில் ரூ50 ஆயிரம் திருட்டு

நாமக்கல், பிப்.28: நாமக்கல்லை அடுத்துள்ள வளையப்பட்டியில், வாரச்சந்தை அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயிலின் உள் பகுதியில் ஒரு பெரிய உண்டியலும், இரண்டு சிறிய உண்டியலும் வைக்கப்பட்டது. இதில், 2015ம் ஆண்டு முதல் இதுவரை உண்டியல் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயிலின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், 3 உண்டியல்களையும் உடைத்து பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாணையில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ50 ஆயிரம் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பழைய குற்றவாளிகளின் கைரேகைகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : temple piggy bank ,Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...