×

எஸ்பி அலுவலகம் அருகிலேயே பணி நேரத்தில் பெண் போலீசார் செல்போன் பார்த்து அரட்டை..!

விருதுநகர், ஜூன் 14:  விருதுநகர் எஸ்பி அலுவலகம் அருகிலேயே பெண் போலீசார் பணி நேரத்தில் செல்போன் பார்த்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். விருதுநகரில் எஸ்பி அலுவலகம் எதிரே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட போவதாக வந்த தகவலை தொடர்ந்து காலை 9 மணிக்கு 50 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டனர்.

மாணவர்கள் வருகை தாமதமானதை தொடர்ந்து போலீசார் எதிரே உள்ள கதர் விற்பனை நிலையத்தின் படிகளில் அமர்ந்து அரட்டை அடித்தனர். பணி நேரத்தில் செல்போன் உபயோகப்படுத்த கூடாது என்ற உத்தரவை மீறி ஒரு கட்டத்தில் செல்போனில் வாட்ஸ் அப், படம் பார்த்து அரட்டை அடித்தனர்.
எஸ்பி அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போதே அமர்ந்து செல்போனில் படம் பார்த்து ஓபி அடிக்கிறார்களே, இவர்கள் மற்ற இடங்களில் எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் ? என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பினர்.

Tags : office ,SSP ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...