×

திருவில்லி. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 14: திருவில்லிபுத்தூரில் உள்ள அரசு விருந்தினர்  மாளிகை அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர்  நகரில் பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு  வெளியூர்களில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தங்கி  ஓய்வெடுத்து எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், பொதுப்பணித்துறை ஆய்வு  மாளிகை வளாகத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்பவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து  ஏற்படுவதற்கு முன், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை  அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tiruvilli ,accident ,Government ,Guest House ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...