திருப்புவனம், ஜூன் 13: திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் திருப்பாச்சேத்தி பிர்காவின் சார்பில் ஜமாபந்தி நேற்று நடந்தது. ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓஏபி, ஓபிசி உட்பட 203மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில் 55 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை ஆர்டிஓ செல்வக்குமாரி தலைமையில் தாசில்தார் ராஜா முன்னிலையிலும் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து, திருப்பாச்சேத்தி ஆர்.ஐ முத்துகார்த்திகை செல்வி, விஏஓ செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல திருப்பாச்சேத்தி பிர்காவில் நடந்த ஜமாபந்தியில் கோட்டாட்சியர் செல்வகுமாரி பயனாளிக்கு பட்ட மாறுதல் உத்தரவு வழங்கினார்.