×

குமரமங்கலத்தில் சாலை விரிவாக்க பணியால் சிரமப்படும் பொதுமக்கள்

திருச்செங்கோடு, ஜூன் 13:  குமரமங்கலத்தில் சாலையை அகலப்படுத்தி, பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திருச்செங்கோடு- நாமக்கல் சாலையில், குமரமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. சிறு  பாலங்களை  அகற்றி பெரிய பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதனால் சாலையின் ஒரு பக்கம் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிகிறது. வாகனப் போக்குவரத்து  அதிகமாக இருக்கும் காலை மாலை நேரங்களில், இப்பகுதியில் நீண்ட தூரம் வாகனங்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காலை மாலை பீக் ஹவர்ஸ் நேரங்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றி சரக்கு, கனரக வாகனங்களை போக்கம்பாளையம், சித்தளந்தூர் வழியாக  மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும், பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumaramangalam ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது