×

உலக சுற்றுச்சூழல் தினம் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்

முத்துப்பேட்டை, ஜூன் 13: முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மரங்களின் அவசியத்தை தெரிவிக்கும் வகையிலும் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் செந்தில்வேல் தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் சிங்காரவேலு வரவேற்று பேசினார். விதைக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் நந்தா ஜீவானந்தம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.
அதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், மரங்களின் அவசியம் பற்றி கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்வி ஆர்வலர் ஜாம்புவானோடை சிங்கார், ஆசிரியர்கள் துரைராசு, குணசீலன். ஆசிரியைகள் சாந்தி, சரோஜா, பிரேமலதா, விஜயலட்சுமி மற்றும் பேட்டை இளம்பரிதி, மகாலட்சுமி குடும்பத்தினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : World Environment Day ,
× RELATED சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா செடி நட்ட வாலிபர்கள்