×

சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா செடி நட்ட வாலிபர்கள்

திருவனந்தபுரம்: உலக சுற்றுச்சூழல் தினம் கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலர் மரக்கன்றுகளை நட்டு, புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே மங்காடு குருசடி சந்திப்பில் சாலையோரம் 3 வாலிபர்கள் செடிகளை நட்டு, புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் கொல்லம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பார்த்தபோது வாலிபர்கள் நட்டது கஞ்சா செடி என தெரியவந்தது. போலீசார் 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்….

The post சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா செடி நட்ட வாலிபர்கள் appeared first on Dinakaran.

Tags : Environment Day ,Thiruvananthapuram ,World Environment Day ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...