×

விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர், ஜூன் 13: திருவள்ளுர்  கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்ட உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நேற்று நடைபெற்றது.
பேரணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.செல்வநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஜெ.என். சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று வீரராகவர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிலாளர் பாதுகாப்பு நல வாரிய ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...