×

நெல்லை அருகே வாலிபருடன் நர்சிங் மாணவி காதல் திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை திடீர் சாவு

நெல்லை, ஜூன் 13: விகேபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நர்சிங் படித்து வந்தார். இவருக்கும் பாபநாசம் கீழணையைச் சேர்ந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி தனியாக சந்தித்து பேசினர். இதில் இளம்பெண் கர்ப்பமானார். இந்நிலையில் அந்த வாலிபருக்கு துபாயில் வேலை கிடைத்ததால் அவர் கடந்த 4 மாதத்திற்கு முன் அங்கு சென்றுவிட்டார். இளம்பெண் கர்ப்பமான விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் காதலனுடன் போனில் பேசினர். அதற்கு அவர் துபாயில் இருந்து வந்ததும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் அவரது கர்ப்பத்தை கலைக்கவில்லை.  இந்நிலையில் கர்ப்பமான 7 மாதத்தில் இளம்பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்படவே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து விகேபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : nursing student ,Nellai ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...