×

9 வயது மகள் பலாத்காரம் தந்தை போக்சோவில் கைது

ஈரோடு, ஜூன் 12: ஈரோட்டில் 9 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஈரோடு  பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (37). தறிபட்டறை தொழிலாளி. இவருக்கு 9  வயதில் மகள் உள்ளார். இவர், கடந்த மாதம் 26ம் தேதி கோடை விடுமுறையில்  வீட்டில் இருந்தார். அப்போது அவரது அம்மா வேலைக்கு சென்று விட்டதால் மதியம்  தூங்கி கொண்டிருந்தார். அப்போது முருகேசன் குடிபோதையில் வீட்டிற்கு  வந்து மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், தூக்கத்தில்  இருந்து எழுந்த மகள், சத்தம் போட்டதால் முருகேசன் வீட்டில் இருந்து  தப்பினார். இதுகுறித்து அவரது அம்மா நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம்  போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்தி, முருகேசனை போக்சோ  சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : Paxo ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை...