×

இரும்பு தடுப்பில் மோதி விவசாயி பலி

நாமக்கல், ஜூன் 12: நாமக்கல் அருகே கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலு(35). விவசாயியான இவர், நேற்று முன்தினம் சொந்த வேலைக்காக நாமக்கல் சென்று விட்டு, டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  கீரம்பூர் 4 ரோடு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சாலையில் இருந்த பேரிகார்டு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாலு படுகாயமடைந்தார். அக்கம்-பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே பாலு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 1 டன் ரேஷன் அரிசியை விற்க முயன்றவர் கைது