×

கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் சாலை, பாலங்கள் சீரமைக்க நபார்டு வங்கி ரூ.159 கோடி வழங்கல்

நாகை, ஜூன் 12: கஜாபுயலால் பாதித்த மாவட்டங்களில் சாலை மற்றும் பாலங்கள் சீரமைக்க நபார்டு வங்கி ரூ.159 கோடி தமிழக அரசுக்கு வழங்குகிறது என்று நபார்டு வங்கி நாகை மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் சாலை மற்றும் பாலங்கள் சீரமைக்க நபார்டு வங்கி தமிழக அரசுக்கு ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.159 கோடி நிதி வழங்குகிறது. இதன்படி கஜா புயலால் பாதித்த மாவட்டங்களான நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கிராமப் புறங்களில் உள்ள 147 சாலைகளும், 115 பாலங்களும் சீரமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் 21 பாலங்கள் சீரமைக்க ரூ.39.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : NABARD ,roads ,bridges ,districts ,Ghaziabad ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...