×

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

ஆவடி, ஜூன் 12:  ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையன்(46).  கூலி தொழிலாளி.  நேற்று காலை செல்லையன் தனது நண்பர்களான காமராஜ், ஆறுமுகம் ஆகியோருடன் தண்டுரை, பெரியார் சாலையில் உள்ள சம்பந்தம் என்பவரது வீட்டு கிணற்றை தூர் வார சென்றார். இவர்கள் மூவரும் மதியம் கிணற்றில் தூர்வாரி முடித்தனர். பின்னர், அவர்களில் காமராஜ், ஆறுமுகம் இருவரும் கிணற்றின் உள்ளே இருந்து கயிறு மூலம் வெளியே வந்தனர்.  

இறுதியாக செல்லையன் கயிறு மூலமாக கிணற்றுக்குள் இருந்து மேலே வர முயன்றார். அப்போது திடீரென கயிற்றில் இருந்து கை தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நண்பர்கள் மீட்டு பட்டாபிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக  அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்லையன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து பட்டாபிராம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...