×

சேத்தியாத்தோப்பு பகுதியில் கூட்டுறவு பெட்ரோல் பங்க் அமைக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, ஜூன் 11: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு மெயின் ரோடு ஆகிய இடங்களில் 2 பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகிறது. இதுபோன்று சேத்தியாத்தோப்பு பகுதியில் அரசு உதவி பெறும் 2 மேல்நிலைப்பள்ளிகளும், 4க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபடியால் தேவைக்கேற்ப பெட்ரோல் கிடைக்காமல் இப்பகுதியில் ஏற்கனவே உள்ள பெட்ரோல் பங்க்குகளும் கடந்த சில நாட்களாக அடிக்கடி மூடப்பட்டு வருகிறது. தனியார் பங்க்குகள் தேவைக்கேற்ப பெட்ரோல், டீசலை இருப்பு வைக்காததும் இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், வர்த்தக வியாபாரிகளும் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே வடலூர் பகுதியில் கூட்டுறவு சங்கம் சார்பில் மண்ணெண்ணெய் பங்க் உள்ளதை போல சேத்தியாத்தோப்பு பகுதியில் போக்குவரத்து மிகுந்த வடக்கு மெயின் ரோடு பகுதியில் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பெட்ரோல் பங்க் துவங்க வேண்டும். மேலும் கூட்டுறவு சங்கம் சார்பில் அமையும் பங்க்கில் நியாயமான விலையில் தரமாகவும், அளவு குறையாமல் பெட்ரோல் கிடைக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வர்த்தக வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Sethiyatope ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி