×

விழிப்புணர்வு விழா

சிவகங்கை, ஜூன் 11: சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு விழா மற்றும் மாவட்ட கூட்டமைப்பு தொடக்க விழா நடந்தது. மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், டிசம்பர் 3 இயக்கம், மாற்றுத்திறனாளிகளின் மாநில கூட்டமைப்பு இணைந்து இவ்விழா நடத்தப்பட்டது. டிசம்பர் 3 இயக்க மாநில தலைவர் பேராசிரியர் தீபக், மாநில பொது செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்து சிறப்புரையாற்றினர். தாசில்தார் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், தென்மண்டல மாற்றுத்திறனாளிகள் நல கூட்டமைப்பு தலைவர் பகீரதநாச்சியப்பன் பேசினர். மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்டத்தலைவர் சதீஷ்பாபு வாழ்த்தி பேசினார். நிர்வாகிகள் வடிவேல், சிக்கந்தர்காஜா, கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

Tags : Awareness ceremony ,
× RELATED சிவகங்கை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு