×

திருப்புத்தூரில் ஜூஸ் கடைக்குள் நுழைந்த 5 அடி ‘கொம்பேறி மூக்கன்’ வியாபாரி அலறி ஓட்டம்

திருப்புத்தூர், ஜூன் 11:  திருப்புத்தூரில் ஜூஸ் கடைக்குள் 5 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புத்தூர் பயணியர் விடுதி அருகே சிவகங்கை சாலையில் சல்மான் என்பவர் சாலையோர ஜூஸ் கடை போட்டுள்ளார். கடைக்குள் சுமார் 5 அடி நீளமுடைய பாம்பு ஒன்று சென்றதைப் பார்த்த இவர் பதட்டத்துடன் வெளியில் ஓடி வந்தார். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவியுடன் பாம்பினை பிடித்தனர். இப்பாம்பு விஷத்தன்மை உடைய ‘கொம்பேறி மூக்கன்’ எனப்படும் வகை பாம்பு என்று கூறினர். சுமார் 5 அடி நீளமுள்ள இப்பாம்பு பிடித்தவுடன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருந்தது பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பின்னர் இப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதகுபட்டி அருகேயுள்ள மண்மலை காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது.

Tags : businessman ,mugan ,juice shop ,
× RELATED தொழிலதிபர் கொலை வழக்கு: என்கவுன்டரில் நேற்றிரவு குற்றவாளி சுட்டுக் கொலை