×

ஓடும் ரயிலில் நகை திருடியவர் கைது

மதுரை, ஜூன். 11: மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் சுசிலா. சுகாதார பணியாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்று காலை பாண்டியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ளார். அப்போது கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து அவர் பையில் வைத்திருந்த 7 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். மதுரை வந்ததும் ரயிலை விட்டு இறங்கிய சுசிலா தனது நகை திருடப்பட்டது தெரிந்து அருகிலிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் சுசிலா அமர்ந்திருந்த பெட்டியில் உள்ள அனைவரையும் சோதனை செய்தனர். அப்போது ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருடியது தெரிந்தது. போலீசார் நகை, பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags : jeweler ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!