கொடைக்கானல், ஜூன் 11: கொடைக்கானலில் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட உள்ளது. கொடைக்கானல் துணை மின் நிலையம் மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கொடைக்கானல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான கொடைக்கானல், பெருமாள் மலை, வில்பட்டி, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கொடைக்கானல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்தார்.