×

திருச்செங்கோட்டில் அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 11: திருச்செங்கோட்டில் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அட்மா திட்டத்தின் கீழ், 2019-20ம் ஆண்டிற்கான வட்டார விவசாயிகளின் ஆலோசனை கூட்டம், திருச்செங்கோடு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் நடந்தது. அட்மா தலைவர்  சதாசிவம் தலைமை வகித்தார். திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குனர்  ஜெயமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம்,  பயிர் காப்பீட்டு திட்டம், கூட்டுப்பண்ணை திட்டம் மானாவாரி நில  மேம்பாட்டு திட்டம் மற்றும் இதர மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமாக உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் இருந்து மூத்த வேளாண் அலுவலர் சௌந்தரராஜன் மண்மாதிரி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Farmers Consultation Meeting ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்