×

அகஸ்தியர் அருவியில் குடிபோதையில் ரகளை

வி.கே.புரம், ஜூன் 11:  பாபநாசம் அகஸ்தியர் அருவியில், போதையில் ரகளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் என்பதால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். நேற்று (ஞாயிறு) விடுமுறை நாள் என்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது சுற்றுலா வந்த செங்கோட்டையை சேர்ந்த பீர்முகம்மது மகன் செய்யதலி உள்ளிட்ட 5 பேர், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் பரமசிவம் கண்டித்தார். இதையடுத்து தலைமை காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து செய்யதலி உள்ளிட்ட 5 பேரும் அவதூறாக பேசினர். அவர் அளித்த புகாரின்பேரில் செய்யதலி (28), செங்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் ரமேஷ் (35), கருத்தான் மகன் திருமலைக்குமார் (25), ஊத்துமலை அருகே கீழக்கலங்கலை சேர்ந்த வெங்கடேசன் மகன் சிவசக்தி (21), பாண்டி மகன் கடல் குமார் (36) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வி.கே.புரம் எஸ்ஐ சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Agastya ,
× RELATED உலக நன்மைவேண்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்