×

ஊதியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

காங்கயம், ஜூன் 7:காங்கயம் அடுத்து ஊதியூர் அருகேயுள்ள சிறுகிணறு கிராமம் கரைப்புதூர் என்ற ஊரை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயியான இவருக்கு சொந்தமான வடக்கு தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்ட திட்டமிட்டார். இதற்கென திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கீரனூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி கார்த்தி (30) என்பவரை வரவழைத்தார்.  நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு சம்பந்தப்பட்ட கிணற்றின் அருகே கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை வைக்க குப்புசாமியுடன், கார்த்தி சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் கிணறு அருகே இருந்த மின்கம்பத்தின் கீழே மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கம்பியை கார்த்தி மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Udayur ,
× RELATED ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு...