பந்தலூர், ஜூன் 7: பந்தலூர் அடுத்த எருமாடு துணை சுகாதார நிலையம் அருகே பார்த்தீனியம் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
பந்தலூர் அருகே எருமாடு இன்கோ நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் வெளிவட்டப்பகுதிகளில் அதிகளவில்பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளதால் சுகாதார நிலையத்திற்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து துணை சுகாதார நிலையம் அருகே இருக்கும் பார்த்தீனியம் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.