×

மக்கள் எதிர்பார்ப்பு: பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் அவதி: கருப்பகவுண்டன்புதூருக்கு வாகனங்கள் சிரமமின்றி செல்ல பேரிகார்டு அமைக்க கோரிக்கை

கரூர், ஜூன் 7: கரூர்-திருச்சி பைபாஸ் சாலை கருப்பக்கவுண்டன்புதூர் பிரிவு அருகே பேரிகார்டு வைக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் சுங்ககேட் பகுதியை தாண்டியதும் திருச்சி செல்லும் சாலையில் கருப்பக்கவுண்டன்புதூர் பகுதிக்கான சாலை பிரிகிறது. கரூர் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும், ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த பிரிவுச் சாலை வழியாக தாந்தோணிமலை, முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்கிறது.
இந்நிலையில், திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும், கரூரில் இருந்து திருச்சி, பசுபதிபாளையம், புலியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் ஒரே சாலையின் வழியாக சென்று வருகிறது. தடுப்புச் சுவர் அமைக்கப்படாத நிலையில், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக, கருப்பக்கவுண்டன்புதூர் பகுதிக்கு வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை இந்த பகுதியில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, அடிக்கடி வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த பகுதியில் வாகனங்கள் எளிதாக பிரிந்து செல்ல வசதியாக பேரிகார்டு வைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Vehicle drivers ,BlackBerry ,
× RELATED நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்