×

எஸ்டேட் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்

வால்பாறை, ஜூன் 5:  வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட்டில் பகுதியில் கடந்த 2 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை, நேற்று அதிகாலை 3 மணி அளவில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் நிறைந்த இப்பகுதியில் காட்டு யானை இரவு முழுவதும் வீடுகளுக்கு முன் இருந்த தோட்டங்களில் முகாமிட்டு, கொய்யா, வாழை, பலா உள்ளிட்ட மரங்களை தின்றும், சேதப்படுத்தியும் பின் காலையில் வனத்திற்குள் சென்றது. மேலும், அசோக் என்பவர் வீட்டின் ஜன்னலை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து யானை வருவதால் இப்பகுதிக்கு மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது எனவே, யானை வருவததை தடுக்க வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : estate area ,
× RELATED நான்சச் எஸ்டேட் பகுதி அரசு பள்ளியில்...