×

கோவை விமானநிலையத்தில் ரூ.90 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

கோவை,மே9: கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பயணி நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்த போது, அவர் தங்க கட்டி மற்றும் தங்க செயின் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரின் பெயர் விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கோவை விமானநிலையத்தில் ரூ.90 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore airport ,Coimbatore ,Coimbatore International Airport ,Singapore ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...