×

ராஜபாளையத்தில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ராஜபாளையம், ஜூன் 5: ராஜபாளையத்தில் குழாய் உடைப்பால், பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நீரை சுத்திகரித்து மேல்நிலை தொட்டிகளில் தேக்கி, அங்கிருந்து குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நகரின் பல பகுதிகளில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, குடிநீர் வீணாகிறது. மேலும், சேதமடைந்த குழாய்கள் வழியாக கழிவுநீர் கலப்பதால், அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, நகரில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கோழிக்கறி வாங்க சென்ற மாணவனுக்கு கத்திக்குத்து