×

தண்ணீர் கேட்டு வந்தவர்களின் தாகம் தீர்க்க நினைத்த மூதாட்டி நகையை பறிகொடுத்த பரிதாபம்

மதுரை, ஜூன் 5: தண்ணீர் கேட்டு வந்தவர்களின் தாகம் தீர்க்க நினைத்த மூதாட்டி தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்குவாசல் பகுதி சின்னக்கடை வீதி அருகே புலியடிராமசாமிதெருவை சேர்ந்தவர் தங்கமணி (77). இவர் சம்பவத்தன்று காலை வீட்டு வாசல் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள், குடிநீர் கேட்டு நடித்துள்ளனர். குடிநீர் எடுக்க மூதாட்டி திசை திரும்பிய போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தாகம் தீர்க்க நினைத்து மூதாட்டி, நகையை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED சோழவந்தானில் உலக நன்மை வேண்டி யாக பூஜை