×

மேலூரில் இடி மின்னலுடன் பலத்த மழை மின்னல் தாக்கி தென்னை தீப்பற்றியது

மேலூர், ஜூன் 5:மேலூரில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் கிராமப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதுடன், மின்னல் தாக்கியதில் 2 தென்னை மரங்கள் எரிந்தன. நேற்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த மழை துவங்கியது. 7 மணி வரை நீடித்த மழை கிடாரிபட்டி, மேலவளவு, மேலூர், ஆட்டுக்குளம், கீழையூர், கீழவளவு, தெற்குப்பட்டி என சுற்றுபகுதி அனைத்திலும் பெய்தது. மழையின் போது மேலவளவு விஎஸ் நகர் பகுதியில் உள்ள மின்வயர் அறுந்து விழுந்து கிராமம் இருளில் மூழ்கியது.கீழவளவு அருகில் உள்ள தம்பட்டர்மலைபட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜனுக்கு சொந்தமான வயலில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 மரங்கள் தீப்பற்றி எரிந்தது. இதில் வேறு எந்த சேதமும் இல்லை.

Tags : Melur ,
× RELATED அரசினர் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம்