×

கலைஞர் பிறந்தநாள் திமுக அன்னதானம் வழங்கல்

வேடசந்தூர்/வத்தலக்குண்டு, ஜூன் 5: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா வேடசந்தூரில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா கொடி ஏற்றி மரக்கன்றுகள் நட்டார். பஸ் நிலையம் முன் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன் கொடி ஏற்றினார். தேவநாயக்கன்பட்டி, நத்தப்பட்டி, குஞ்சுவீரன்பட்டி ஆகிய பகுதியிகளில் சுமார் 1000 பேர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேடசந்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன் உசிலம்பட்டியில் கொடி ஏற்றினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய துணை செயலாளர் நாகப்பன், ஊராட்சி செயலாளர்கள் சுரேஷ், மருதபிள்ளை மாரிமுத்து, துரைராஜ், மருத்துவ அணி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடமரையில் நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பையன், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், பேரூர் துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் சண்முகவேலு கலந்து கொண்டனர். வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் விருவீடு செல்வராஜ், மணிகண்டன், லிங்கப்பாண்டியன், முருகேசன், சிதம்பரம், நகர நிர்வாகிகள் குமரவேல், அமுதவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதி செயலாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர் கோபால் ராஜ்குமார், சகாபுதீன், கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Artist ,DMK Annadhanam ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்