×

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மூத்த பத்திரிகையாளரும், 2021ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான ஐ.சண்முகநாதன் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். இதழியல் துறையில் எழுபதாண்டுகளை கடந்த பெருமைக்குரியவர். ‘ஒரு தமிழன் பார்வையில் 20ம் நூற்றாண்டு வரலாறு’, ‘கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்’ வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.

சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்கு பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சண்முகநாதன் மறைவுக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Shanmuganathan ,Chennai ,M. K. Stalin ,Sanmukanathan ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...