×

சேரன்மகாதேவியில் மனோஜ்பாண்டியன் நன்றி தெரிவிப்பு

வீரவநல்லூர், ஜூன் 5: சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் நேற்று சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதியில் வாக்காளர்களுக்கு வீதி,வீதியாக சென்று நன்றி தெரிவித்தார். கோபாலசமுத்திரத்தில் துவங்கிய நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியை துவக்கினார். மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, கூனியூர், காருகுறிச்சி, புதுக்குடி மற்றும் வீரவநல்லூர் பகுதிகளில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில் ஆவின் துணை சேர்மன் கணபதி, பனைவெல்ல கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜெபராஜன், மாவட்ட இலக்கியஅணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் கருத்தபாண்டியன், சேரன்மகாதேவி நகர செயலாளர் ஐசக்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் இசக்கிபாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பழனிக்குமார், கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Manojpandian ,Cheranmakadevi ,
× RELATED சேரன்மகாதேவியில் பைக் விபத்தில் விவசாயி பலி